செய்திகள்
கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

Published On 2021-03-24 02:04 GMT   |   Update On 2021-03-24 02:04 GMT
கர்நாடகத்தில் புதிதாக 2,010 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை மாநிலத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 98 ஆயிரத்து 733 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,010 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 73 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 5 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து நேற்று 677 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 45 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 136 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 595 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 1,280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பல்லாரியில் 39 பேர், பெலகாவியில் 16 பேர், பெங்களூரு புறநகரில் 36 பேர், பீதாில் 76 பேர், சிக்பள்ளாப்பூரில் 10 பேர், தட்சிண கன்னடாவில் 74 பேர், தார்வாரில் 17 பேர், ஹாசனில் 24 பேர், கலபுரகியில் 129 பேர், குடகில் 19 பேர், மண்டியாவில் 11 பேர், மைசூருவில் 100 பேர், ராய்ச்சூரில் 14 பேர், சிவமொக்காவில் 23 பேர், துமகூருவில் 40 பேர், உடுப்பியில் 28 பேர், விஜயாப்புராவில் 12 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 3 பேர், ஹாசன், கலபுரகியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் 2 நாட்கள் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று முன்தினம், ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. கர்நாடகத்தில் மீண்டும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News