செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி 4 வார்டுகளில் வெற்றி

Published On 2021-03-03 08:02 GMT   |   Update On 2021-03-03 08:02 GMT
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 வார்டுகளிலும் காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

அங்கு ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி, சவுகன் பன்கர் ஆகிய 5 மாநகராட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 28-ந் தேதி நடைபெற்றது.

327 வாக்குச்சாவடி மையங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்து இருந்தனர். ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவியது.

இதற்காக வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி ஆகிய 4 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றது.

டெல்லியில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவு முன்னோட்டமாக இருக்கும்.




Tags:    

Similar News