search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aap"

    • சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.
    • அரவிந்த் கெஜ்ரிவாலை திகாரில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பதிவியில் இருந்து விலகாத நிலையில், சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, "மக்கள் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் சந்தித்ததாகவும், அவருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் நான் அரை மணி நேரம் சந்தித்தேன். அப்போது, "மக்கள் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று அவர் கூறினார். "அவர் வலிமையானவர்" என்றும் "டெல்லி மக்களின் ஆசீர்வாதத்துடன் தனது போராட்டத்தை தொடருவேன்" என்றும் அவர் கூறினார். 

    • மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும் அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

    இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனு மீதான தீர்ப்பு வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.
    • நம்மை விட ஜெயில் நிர்வாகம் அங்குள்ள கைதிகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

    திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொள்ள விடாமல் தடுத்து கொலை செய்ய பா.ஜனதா மற்றும் அமலாக்கத்துறை சதி திட்டம் செய்வதாக ஆம் ஆத்மி கட்சி நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தது.

    இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என பா.ஜனதா பதில் அளித்துள்ளது.

    பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ஷஜியா இல்மி டெல்லி மாநில கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஷஜியா இல்மி கூறியதாவது:-

    அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம். நம்மை விட ஜெயில் நிர்வாகம் அங்குள்ள கைதிகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

    எந்த அமைப்பும் அல்லது ஜெயில் நிர்வாகமும் அவரது உடல்நலத்தை கெடுத்து, அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த ஏன் விரும்பனும்?. யாரும் இதுபற்றி ஏன் யோசிக்கனும்?.

    இதுபோன்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இது போன்ற உணர்வுப்பூர்வமான கருத்துகளை ஆம் ஆத்மி கட்சி தவிர்க்க வேண்டும். இன்சுலின் எடுத்துக்கொள்ள அதிகாரிகள் மறுப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் எந்த சிறையிலும் இதைச் செய்ய மாட்டார்கள். நாம் மிகவும் பொறுப்புள்ள ஜனநாயக நாடு. முதலமைச்சர் அல்லது யாராக இருந்தாலும் மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக நான் நினைக்கவில்லை.

    இவ்வாறு ஷஜியா இல்மி தெரிவித்துள்ளார்.

    • மதுபான கொள்கை மூலம் பெற்ற பணத்தை கோவா, பஞ்சாப் தேர்தல் பயன்படுத்தியதாக ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு.
    • கோவா தேர்தலின்போது ஆம் ஆத்மியின் நிதியை நிர்வகித்தவர் சன்பிரீத் சிங் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். லைசென்ஸ் வழங்குவதற்கு பதிலாக சுமார் 100 கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும் இந்த பணம் கோவா, பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக செலவிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் நேற்று அமலாக்கத்துறை சன்பிரீத் சிங் என்பரை கைது செய்துள்ளது. இவர் கோவா தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் நிதியை நிர்வகித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சன்பிரீத் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவலில் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால் சன்பிரீத் சிங் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பா.ஜனதா கட்சிகளுக்காக வேலை செய்துள்ளார். தற்போது ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி என ஆம் ஆத்மியின் டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக சவுரப் பரத்வாஜ் கூறுகையில் "அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சன்பிரீத் சிங் கடந்த வருடம் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர். அவர் தானாகவே சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த வருடம் ஜாமின் பெற்றார். தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சன்பிரீத் வெளியில் இருந்து கொண்டு (freelancer) பல கட்சிகளுக்கு வேலைப்பார்த்துள்ளார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு, அதையும் தாண்டி பா.ஜனதாவுக்காகவும் வேலைப் பார்த்துள்ளார். இதை நான் இங்கே சொல்லவிலை. சிபிஐ ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

    இது ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை களங்கப்படுத்தும் முயற்சியாகும். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சிக்கு எதிராக உருவாக்கும் குற்றச்சாட்டை நம்ப மக்கள் தயாராக இல்லை. பா.ஜனதா அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை இழிவுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது" என்றார்.

    • ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார்
    • ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்

    முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர். இக்கூட்டத்தில், முதல்வரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய், தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக், மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் 2 தகவல்களை சுனிதாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    அது தொடர்பாக டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நமது நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே வரும் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி அரசியல் சாசனத்தை காக்கும் தினமாகவும் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டும் நாளாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

    மேலும், நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியதாக அவர் தெரிவித்தார்.

    அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் பேசி வருவதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இதனை அறிவித்துள்ளது.

    • பா.ஜனதா, பெண் அமைச்சருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்.
    • தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் அதிஷி கருத்து.

    பாரதீய ஜனதா கட்சியில் சேராவிட்டால் அமலாக்கத் துறையால் கைது செய்ய போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது என்று டெல்லி பெண் அமைச்சர் அதிஷி தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பா.ஜனதா, பெண் அமைச்சருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது.

    மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் பா.ஜனதா புகார் செய்தது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் அதிஷி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிஷி கூறியதாவது:-

    ஏப்ரல் 4-ம் தேதி (நேற்று), எனது செய்தியாளர் சந்திப்பில் ஒன்றின் மீது பாஜக புகார் அளித்தது. ஏப்ரல் 5-ம் தேதி காலை 11:15 மணிக்கு, அதிஷிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்தி சேனல்கள் ஒளிப்பரப்பின. ஆனால் அடுத்த அரை மணி நேரத்திற்குள் எனக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அறிவிப்பு வந்தது.

    அதாவது, தேர்தல் கமிஷன் நோட்டீசை முதலில் ஊடகங்களில் பா.ஜ.க.வினர் போடுகிறார்கள் அதன் பிறகு எனக்கு நோட்டீஸ் வருகிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா என்பதே எனது கேள்வி.

    அனைத்து மத்திய அமைப்புகளும், பாஜகவிடம் மண்டியிட்டது கவலைக்குரிய விஷயம்.

    மேலும் தற்போது தேர்தல் ஆணையம் கூட பாஜகவிடம் மண்டியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பல்வேறு பிரச்சனைகளில் புகார்களை பதிவு செய்ய முயற்சிக்கும்போது எங்களுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை.

    எம்சிசி செயல்படுத்தப்பட்ட பிறகும், மத்திய அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆனால் பா.ஜ.க.வினர் புகார் பதிவு செய்த உடனேயே 12 மணி நேரத்தில் நோட்டீஸ் வருகிறது. நோட்டீஸ் வெளியிடுவது தேர்தல் ஆணையமா அல்லது பாஜகவா?

    டிஎன் சேஷனின் வாரிசுகளாக இருந்து, இந்த நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவது அவர்களின் பொறுப்பு என்று தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது
    • இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள் - உச்ச நீதிமன்றம்

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரது ஜாமின் மனுவை ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

    சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இதனையடுத்து சஞ்சய் சிங்கிற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

    இதனையடுத்து, இன்று சஞ்சய் சிங், டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.

    திகார் சிறைக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சியினர் இடையே பேசிய அவர், "இது கொண்டாடுவதற்கான நேரம் அல்ல மாறாக போராட வேண்டிய நேரம். நமது கட்சியின் மூத்த தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு விரைவில் அவர்கள் வெளியே வருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் விடுவிக்கப்படும் வரை, நாம் கொண்டாட மாட்டோம், நாம் தொடர்ந்து போராடுவோம்" என்று தெரிவித்தார்.

    • கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார் என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.
    • வீட்டில் சமைத்த உணவை சாப்பிட கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு 4½ கிலோ எடை குறைந்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லி மந்திரி அதிஷி இன்று காலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடுமையான நீரிழிவு நோயாளி. அவருக்கு உடல் நலக்குறைவு இருந்த போதிலும் 24 மணி நேரமும் தேசத்திற்கு சேவை செய்ய உழைத்தார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து தற்போது 4½ கிலோ உடல் எடை குறைந்துள்ளார்.

    இது மிகவும் கவலை அளிக்கிறது. அவரது உடல் நிலையை பா.ஜனதா ஆபத்தில் ஆழ்த்துகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் நலமாக இருப்பதாகவும், கடந்த 1-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்ட போது 55 கிலோ எடை இருந்ததாகவும், தற்போதும் இருப்பதாகவும் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, வீட்டில் சமைத்த உணவை சாப்பிட கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அவரது சர்க்கரை அளவு குறைந்தது. அவருக்கு சர்க்கரை அளவு தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் இருந்தததால் திகார் சிறை டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது ரத்த சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது. அவர் யோகா செய்தார் என்றனர்.

    • நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? - உச்ச நீதிமன்றம்
    • அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரது ஜாமின் மனுவை கடந்த 7-ம் தேதி விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தது.

    இந்நிலையில், டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் வராலே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

    இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

    சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இதனையடுத்து சஞ்சய் சிங்கிற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • இன்னும் இரண்டு மாதங்களில் 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 3 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பல துறைகளை கையில் வைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில பெண் மந்திரியுமான அதிஷி, இன்னும் ஒரு மாதத்தில் தான் கைது செய்யப்படுவேன் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அதிஷி கூறியிருப்பதாவது:-

    எனக்கு மிகவும் நெருங்கியவர் மூலமாக பா.ஜனதா என்னை அணுகி, என்னுடைய அரசியல் வாழ்க்கையை பாதுகாக்க அக்கட்சியில் இணைய கேட்டுக்கொண்டது. நான் பாரதீய ஜனதாவில் இணையவில்லை என்றால், இந்த மாதத்தில் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன்.

    மக்களை தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மாதங்களில் அவர்கள் இன்னும் நான்கிற்கும் அதிகமான ஆம் ஆத்மி தலைவர்களை கைது செய்வார்கள். சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதாக், ராகவ் சதா உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    • பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஜலந்தர் தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு எனக்கு உதவவில்லை
    • பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜகவில் இணைத்துள்ளேன் என்று சுஷில் குமார் தெரிவித்துள்ளார்

    பஞ்சம் மாநிலத்தில் ஜலந்தர் தொகுதி எம்.பியான சுஷில் குமார் மற்றும் ஜலந்தர் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஷீதன் அங்கூரல் ஆகியோர் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்த ஒரே ஒரு எம்.பி சுஷில் குமார் ரிங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஜலந்தர் தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு எனக்கு உதவவில்லை. அதனால் தான் ஜலந்தர் மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஆதலால் பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜகவில் இணைத்துள்ளேன் என்று சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.

    மீண்டும் ஜலந்தர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக சுஷில் குமார் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார் சுஷில் குமார். அதன் பின் தற்போது அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

    • டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி அறிவிப்பு.
    • தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

    மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

    அந்த வகையில், "நாட்டில் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி இன்று ஊடக பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அனைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எக்ஸ், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக கணக்குகளில் தங்கள் சுயவிவரப் படத்தை மாற்றுவார்கள்.

    சுயவிவரப் படத்தில், "மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்" என்ற தலைப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்று உள்ளது.

    நாட்டிலேயே பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடக்கூடிய ஒரே தலைவர் கெஜ்ரிவால் மட்டுமே. எனவே, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

    கலால் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய போதிலும் "ஒரு பைசா" ஆதாரத்தை கூட சமர்ப்பிக்க முடியவில்லை.

    பாஜகவும் மோடியும் கெஜ்ரிவாலை நசுக்க விரும்புகின்றனர். ஆம் ஆத்மி, நாட்டில் "சர்வாதிகாரத்திற்கு" எதிரான போரை நடத்தி வருகிறது.

    ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவது கெஜ்ரிவாலின் போராட்டம் மட்டுமல்ல, கட்சியின் சமூக ஊடக டிபி பிரச்சாரத்தில் சேரவும் மக்களை அவர் வலியுறுத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×