செய்திகள்
கொரோனா வைரஸ்

கர்நாடகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனாவுக்கு பாதிப்பு இல்லை

Published On 2021-02-16 02:44 GMT   |   Update On 2021-02-16 02:44 GMT
கர்நாடகத்தில் 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 9 மாவட்டங்களில் கொரோனாவுக்கு யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கர்நாடகத்தில் நேற்று கொரோனாவுக்கு 368 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 45 ஆயிரத்து 638 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 267 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 430 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள்.

இதன்மூலம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 27 ஆயிரத்து 580 ஆக உள்ளது. 5 ஆயிரத்து 772 பேர் சிகிச்சையில் உள்ளனர். 128 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 42 ஆயிரத்து 245 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு கோடியே 79 லட்சத்து 98 ஆயிரத்து 276 பேருக்கு பரிசோதனை நடந்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் ஒருவர், பல்லாரி, பெலகாவி, சிக்கமகளூருவில் தலா 5 பேர், பெங்களூரு புறநகர், தார்வாரில் தலா 8 பேர், பெங்களூரு நகரில் 196 பேர், சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்காவில் தலா 4 பேர், தட்சிண கன்னடாவில் 9 பேர், தாவணகெரேயில் 2 பேர், ஹாசனில் 14 பேர், ஹாவேரியில் 3 பேர், கலபுரகியில் 10 பேர், மண்டியாவில் 19 பேர், மைசூருவில் 10 பேர், ராய்ச்சூரில் 2 பேர், சிவமொக்காவில் 20 பேர், துமகூருவில் 25 பேர், உடுப்பியில் 11 பேர், உத்தர கன்னடாவில் 7 பேர் பாதிக்கப்பட்டனர். பீதர், சாம்ராஜ்நகர், கதக், குடகு, கோலார், கொப்பல், ராமநகர், விஜயாப்புரா, யாதகிரி ஆகிய 9 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. பெங்களூரு நகரில் 2 பேர் இறந்தனர். 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News