செய்திகள்
ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு பெரிய முதலாளிகள் மட்டுமே கடவுளாகத் தெரிகின்றனர் - ராகுல் காந்தி

Published On 2021-02-08 17:51 GMT   |   Update On 2021-02-08 17:51 GMT
மத்தியில் உள்ள அரசு விவசாயிகளுக்கானதும் அல்ல, இளைஞர்களுக்கானதும் அல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் 2021 அறிக்கையை சமர்ப்பித்தார். மத்திய அரசின் பட்ஜெட் 2021ஐ ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசு விவசாயிகளுக்கானதும் அல்ல, இளைஞர்களுக்கானதும் அல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மத்திய பட்ஜெட்டில் ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் நலன் ஆகிய இரண்டும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கானதும் அல்ல; இளைஞர்களுக்கானதும் அல்ல. பெரிய முதலாளிகள் மட்டுமே அவர்களுக்கு கடவுளாகத் தெரிகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News