செய்திகள்
கோப்புப்படம்

காஷ்மீரில் ராணுவ அதிகாரி தற்கொலை

Published On 2021-01-18 23:37 GMT   |   Update On 2021-01-18 23:37 GMT
வடக்கு காஷ்மீரின் எல்லையோர பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்:

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லையோர பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்த முடிவை ஏன் எடுத்தார் என்பது பற்றி உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை. அவர், தங்டார் செக்டாரில் ராணுவ பிரிவில் உயர்தர அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அவரது தற்கொலை பற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டிய சூழ்நிலை எது?” என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக ராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News