செய்திகள்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கோபமடைந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

Published On 2021-01-15 17:38 GMT   |   Update On 2021-01-15 17:38 GMT
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், திடீரென கோபமடைந்து, உரத்த குரலில் பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
பாட்னா:

பீகார் மாநிலம் பாட்னாவில் இண்டிகோ விமான நிறுவன மேலாளர் ரூபேஷ் சிங் என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். முதல்வர் இல்லத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சியான பாஜகவும் போர்க்கொடி தூக்கியிருப்பதால், நிதிஷ்குமாருக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், முதல்வர் நிதிஷ்குமார் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News