செய்திகள்
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
கொரோனா வைரஸ் எல்லைகள் தாண்டி நாள்தோறும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் சாமானியன் முதல் அதிகாரம் பலம் மிக்க நபர் என யாரையும் விட்டு வைப்பதில்லை. வயது வித்தியாசமின்றி நோய் தொற்று ஏற்படுகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் சச்சின் பைலட், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். டாக்டரின் ஆலோசனையை பின்பற்றி வருகிறேன். விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.