செய்திகள்
பீகார் தேர்தல் - கிஷண்கஞ்ச், கதிஹார் பகுதிகளில் ராகுல் காந்தி இன்று பிரசாரம்
பீகார் சட்டசபை தேர்தலுக்காக கிஷண்கஞ்ச் மற்றும் கதிஹார் பகுதிகளில் ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நடைபெறும் மூன்று கட்டத் தேர்தல்களில் 71 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 28ம் தேதி நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை நடைபெறுகிறது. 17 மாவட்டங்களில் அடங்கி உள்ள 94 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்காக கிஷண்கஞ்ச் மற்றும் கதிஹார் பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.