செய்திகள்
வைரல் புகைப்படம்

கழுத்தில் தூக்கு கயிறு முகத்தில் புன்னகை - சிரியாவில் எடுக்கப்பட்டதாக பலே கதையுடன் வைரலாகும் புகைப்படம்

Published On 2020-10-21 04:53 GMT   |   Update On 2020-10-21 04:53 GMT
கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்ட நிலையிலும் முகத்தில் புன்னகையுடன் காணப்படும் நபரின் புகைப்படம் சிரியாவில் எடுக்கப்பட்டதாக வைரலாகி வருகிறது.

கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்ட நிலையிலும் முகத்தல் புன்னகையுடன் நிற்கும் நபரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் சிரியாவில் எடுக்கப்பட்டதாகவும், தூக்கு முனையில் நிற்பவர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதால் தூக்கிலிடப்பட்டதாக வைரல் பதிவுகளில் கூறப்படுகிறது.

'கிறிஸ்துவ மத நம்பிக்கை கொண்டிருந்ததால், இந்த நபர் தூக்கிலிடப்பட்டார். கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருப்பதால் புகைப்படத்தில் இருப்பவர் சிரித்து கொண்டிருக்கிறார். நாம் கடவுள் மற்றும் காப்பாளரின் பெருமையை போற்ற வேண்டிய நேரம் இது' எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது. 



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த புகைப்படத்தில் இருப்பவர் மஜித் ஔசிபர் என்பதும் இவர் நீதிபதியை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஈரானில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் செய்தி தொகுப்புகளும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பவர், கிறிஸ்துவ மத நம்பிக்கை கொண்டிருந்ததால், தூக்கிலடப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Tags:    

Similar News