செய்திகள்
டி.கே.சிவக்குமார் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் டி.கே.சிவக்குமார் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு கடந்த 25-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், குணம் அடைந்ததை அடுத்து வீடு திரும்பினார். டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. அதிக காய்ச்சலால் அவதிப்பட்டதை அடுத்து அவர் ஜெயநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் மீண்டும் காய்ச்சலால் அவதிப்பட்டதை அடுத்து ஜெயநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் டி.கே.சிவக்குமார் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு கடந்த 25-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், குணம் அடைந்ததை அடுத்து வீடு திரும்பினார். டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. அதிக காய்ச்சலால் அவதிப்பட்டதை அடுத்து அவர் ஜெயநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் மீண்டும் காய்ச்சலால் அவதிப்பட்டதை அடுத்து ஜெயநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் டி.கே.சிவக்குமார் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.