செய்திகள்
வெடிகுண்டு வீச்சில் காயமடைந்த மக்கள்

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 6 பேர் காயம்

Published On 2020-08-31 12:01 GMT   |   Update On 2020-08-31 12:01 GMT
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ராணுவ வாகனம் ஒன்று ஸ்ரீநகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.  அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களில் 6 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்ட பாதுகாப்பு படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News