செய்திகள்
ரந்தீப் சிங் சுர்ஜிவாலா

சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது - காங்கிரஸ்

Published On 2020-08-23 15:20 GMT   |   Update On 2020-08-23 15:20 GMT
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலலைவர் சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து, கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூட உள்ள நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக  முடிவு செய்திருப்பதாக  தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை முற்றிலும் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறுத்துள்ளது.  

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளிக்கையில், “சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது” என தெரிவித்தார்.
Tags:    

Similar News