செய்திகள்
ராகுல் காந்தி

ராமர் என்றால் அன்பு: ராமர் கோவில் குறித்து ராகுல் காந்தி டுவீட்

Published On 2020-08-05 12:23 GMT   |   Update On 2020-08-05 12:23 GMT
ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றுள்ள நிலையில், ராமர் என்றால் அன்பு என ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்து கொண்டு 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டினார்.

ராமர் கோவில் கட்டப்படும் நிலையில் ராகுல் காந்தி இதுகுறித்து தனது டுவிட்டர் பகுதியில் ‘‘ராமர் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு. அவர் நம் மனதின் ஆழத்தில் இருக்கும் மனித நேயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 

ராமர் என்றால் அன்பு. அவர் ஒரு போதும் வெறுப்பில் வெளிப்படுவதில்லை. ராமர் என்றால் கருணை. அவர் ஒரு போதும் கொடுமையில் வெளிப்படுவதில்லை. ராமர் என்றால் நீதி. அவர் ஒரு போதும் அநீதியின் மூலம் வெளிப்படுவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News