செய்திகள்
சிவராஜ் சிங் சவுகான்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சிவராஜ் சிங் சவுகான்

Published On 2020-08-05 05:53 GMT   |   Update On 2020-08-05 05:53 GMT
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
போபால்:

கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் இந்தியா முழுவதும் 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள், அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.
 
இதற்கிடையே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டாக்டர்களின் அறிவுரைப்படி தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 

மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி போபாலில் உள்ள சிராயூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து சிராயு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மேலும், உடல்நலனை கருத்தில் கொடு ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News