செய்திகள்
தற்கொலை

மாமியார் துடைப்பத்தால் அடித்ததால் தொழிலாளி தற்கொலை

Published On 2020-07-26 06:00 GMT   |   Update On 2020-07-26 06:00 GMT
மேற்குவங்காளத்தில் மாமியார் துடைப்பத்தால் அடித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஜோஷ்கோடங்கா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சவ்மித்ரா ஆதிகாரி (வயது 45). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் சவ்மித்ரா ஆதிகாரியின் மனைவி அவருடன் கோபித்துக் கொண்டு மகளுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சவ்மித்ரா ஆதிகாரி தனது மகளைப் பார்ப்பதற்காக மனைவியின் வீட்டுக்கு நேற்று சென்றார். அப்போது அவரது மனைவியும், மாமியாரும் குழந்தையைப் பார்க்க விடாமல் அவருடன் தகராறு செய்தனர். அது மட்டுமின்றி சவ்மித்ரா ஆதிகாரியின் மனைவியும் மாமியாரும் அவரை துடைப்பத்தால் சரமாரியாக அடித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டுக்கு வந்து படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சவ்மித்ரா ஆதிகாரியின் தாய், தனது மகனின் சாவுக்கு அவரது மனைவியும் மற்றும் மாமியருமே காரணம் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News