செய்திகள்
பரிசோதனை செய்யும் ஊழியர்

டெல்லியை உலுக்கும் கொரோனா - 92 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

Published On 2020-07-02 15:32 GMT   |   Update On 2020-07-02 15:32 GMT
தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,373 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 92 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
புதுடெல்லி: 

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,373 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 92,175 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 61 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2864 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News