செய்திகள்
பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் - பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நாளை உரையாற்றுகிறார்

Published On 2020-06-20 11:07 GMT   |   Update On 2020-06-20 11:07 GMT
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த ஆண்டு யோகா தின பயிற்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை.

இதனால், தலைநகர் டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். அப்போது யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கவுள்ளார். 
Tags:    

Similar News