search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Yoga Day"

    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார்.
    • உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மத்திய, மாநில மந்திரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான படத்தை அவர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சர்வதேச யோகா தினமான இன்று விண்வெளி நிலையத்தில் யோகா பயிற்சி செய்து வருகிறேன். யோகா உடலை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனதையும் கூர்மைபடுத்துகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது. உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர்.

    நெல்லை:

    உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

    யோகா கலையின் மகத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக பிரம்மாண்டமான முறையில் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான யோகா தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படு கிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டரங்கில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் உள்ளிட்டவர்கள் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தின ராக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்ட னர். சங்க செயலா ளர் அழகேசராஜா யோகாசன பயிற்சிகளை வழங்கினார். இதில் யோகாசன சங்க ஆலோசகர் மரியசூசை, விவேகா அமல்தாஸ், யோகாசன சங்க துணைத் தலைவர் சிவசங்கர், வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர். வயது வித்தியாசமின்றி சுமார் ஆயிரம் பேர் இந்த யோகாசனத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இதேபோல் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த யோகாதின நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்ட னர். பாளை சாரதா கல்லூரி யில் என்.சி.சி. மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா தின நிகழ்வும் நடைபெற்றது. இதில் மாணவிகள்-ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இதே போல பாளை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான அஞ்சல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    • பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
    • ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் யோகா தினம் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். வரும் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்.

    இந்நிலையில், வரும் 21-ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    மறுநாளான 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு அதிபர் ஜோ பைடன் இரவு நேர விருந்து அளிக்கிறார். அதற்கடுத்த நாள் வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகின்றனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    அமெரிக்கா, இந்தியா ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யோகா தினத்துக்கு 100 நாட்கள் உள்ள நிலையில் அதை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
    • நீங்கள் யோகாவை ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால் அதை சீக்கிரம் செய்யுங்கள் என்று பிரதமர் மோடி உள்ளார்.

    சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. யோகா நிகழ்ச்சிக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் வருகிற 13 முதல் 15-ந்தேதி வரை டெல்லியில் 3 நாட்கள் யோகா நிகழ்ச்சி நடக்கிறது.

    இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறும்போது, 'யோகா தினத்துக்கு 100 நாட்கள் உள்ள நிலையில் அதை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் யோகாவை ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால் அதை சீக்கிரம் செய்யுங்கள்' என்று கூறி உள்ளார்.

    • சர்வதேச யோகா தின நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு, மற்றும் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யோகா செய்முறை பயிற்சிகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டம் ஆடல், பாடல், விழாக்கள செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீரடிபட்டி குடியிருப்பில் செயல்பட்டு வரும்

    இல்லம் தேடி கல்வி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச யோகா தின நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு, மற்றும் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யோகா செய்முறை பயிற்சிகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    இதேபோல அம்மா புதுப்பட்டி, மருங்கூரணி, ராசா பட்டி, வடுகப்பட்டி மல்லிகை நத்தம், மஞ்ச பேட்டை, மங்கனூர், வலச்சேரிப்பட்டிஆகிய இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு சர்வதேச யோகா தினம் குறித்த விழிப்புணர்வும், பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    • தெய்வானை அம்மாள் கல்லூரியில் - சர்வதேச யோகா தினம் நடைபெற்றது,
    • கூடுதல் சேவை அமைப்புக்களைச் சேர்ந்த 50 மாணவியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் கல்லூரி மைதானத்தில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் அகிலா, துணை முதல்வர் பேராசிரியர் செல்வி, மாணவியர் புலமுதன்மையர் பேராசிரியர் ராஜேஷ்வரி, யோகா மாஸ்டர்வெங்கடேசன், கூடுதல் சேவை அமைப்புகளைச் சார்ந்த பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், பல்வேறு கூடுதல் சேவை அமைப்புக்களைச் சேர்ந்த 50 மாணவியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி.
    • மத்திய தொல்லியல் கலாச்சாரத் துறை அலுவலர்களுடன் யோகாசனம் செய்தார்.

    கன்னியாகுமரி:

    2014-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவில் உள்ள முக்கியமான 75 இடங்களில் பலதரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் இன்று யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    இதில் மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சார துறை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டு யோகா சனம் செய்தார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    முன்னதாக அதிகாலை 6 மணிக்கு சூரியன் உதயமாகும் நேரத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மத்திய மந்திரி மீனாட்சி லேகி , மத்திய தொல்லியல் கலாச்சாரத் துறை அலுவலர்களுடன் யோகாசனம் செய்தார்.

    விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    விருதுநகர்:

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பா.ஜ.க. நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சோலையப்பன், நகர தலைவர் செந்தில் குமார், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள் கஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    நள்ளிச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். சாத்தூர் ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் நடந்த விழாவில், கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆசனங்களை செய்தனர். கல்லூரி முதல்வர் கணேஷ்ராம் தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை என்.சி.சி. தலைமை அதிகாரி கர்னல் அன்சார் முகமது, என்.சி.சி. பொறுப்பாளர் பாண்டியராஜன் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில், பள்ளி தாளாளர் குருவலிங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிர்வாக அலுவலர் அழகர்சாமி, பள்ளி முதல்வர் கமலா, துணை முதல்வர் சித்ரா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் தர்மராஜ் செய்திருந்தார்.

    வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டி எஸ்.பி. மாடர்ன் பள்ளியில், பள்ளி தாளாளர் பார்வதி சுந்தரராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இயக்குனர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து காண்பித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியை ரமாபிரபா, புஷ்பா, உடற்கல்வி ஆசிரியர் நிக்‌ஷன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    விருதுநகர் காமராஜ் என்ஜினீயரிங் கல்லூரி நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக அம்பாள் முத்துமணி கலந்து கொண்டு பேசினார். விழாவில் கல்லூரி செயலாளர் மகேஷ்குமார், முதல்வர் ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். யோகா பயிற்சியாளர் கந்தசாமி மற்றும் பெங்களூரு வாழும் கலை மையத்தின் யோகா பயிற்சியாளர் திவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு யோகாசனங்களை கற்றுக்கொடுத்தார். பள்ளி தாளாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தலைமை முதல்வர் பாலசுந்தரம், முதல்வர் அம்பிகாதேவி, துணை முதல்வர்கள் ஞானபுஷ்பம், சுதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி நாயக்கர் மகமை பண்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் நிர்வாகிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். விழாவில் பள்ளியின் தலைவர் சுப்புராஜ் செயலாளர் ரவி, பொருளாளர் ராஜாராம், இணைசெயலாளர்கள் ராஜப்பன், பாலாஜி மற்றும் ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் தலைவர் திருப்பதிராஜ், செயலாளர் ரவீந்திரன் மற்றும் பொருளாளர் கண்ணபிரான் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரியில் 121 பெண்கள் நேற்று காலை 7 மணி முதல் இன்று மாலை 7 மணி வரை உணவு இடைவேளையின்றி தொடர்ச்சியாக 36 மணி நேரம் யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளனர். # #YogaDay2018 #Yoga #InternationalYogaDay2018

    புதுச்சேரி:

    காஞ்சிபுரத்தை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கும் மஹாயோகம் அமைப்பின் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி புதுவையில் நடந்தது. புதுவை இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் 121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர தொடர் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று காலை நடந்தது.

    விழாவுக்கு மகாமகரிஷி அறக்கட்டளை விஜயானந்தன் தலைமை வகித்தார். ரமேஷ்ரிஷி வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கமலகண்ணன், அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், சுவிஸ் நாட்டு கம்பன் கழக தலைவர் சரவணபவ ஆகியோர் வாழ்த்தி பேசினர்.



    யோகாவில் 18 வயது முதல் 72 வயதுவரை உடைய பெண்கள் பங்கேற்று உணவு, உறக்கமின்றி யோகா செய்தனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய யோகா சாதனை நிகழ்ச்சி இன்று மாலை 7 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. நிறைவு விழாவில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்றார். #InternationalYogaDay2018 #yoga #yogaday 
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விமானத்தில் இருந்து குதித்து ஆகாயத்தில் மிதந்தபடி விமானப்படை வீரர்கள் இருவர் யோகா செய்துள்ளனர். #InternationalYogaDay2018
    லக்னோ :

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு அதை ஏற்று 175 நாடுகளின் ஆதரவுடன் ஜூன் மாதம் 21-ந்தேதியை “உலக யோகா தினம்” ஆக கொண்டாட தீர்மானம் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி உலக யோகா தினம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு இன்று (வியாழக்கிழமை) சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டது.



    அதன் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படை வீரர்களான சன்யால் மற்றும் கஜானந்த் யாதவ் இருவரும் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து குதித்து யோகா செய்து அசத்தினர். அவர்கள் இருவரும் வாயு நமஸ்கார ஆசனம் மற்றும் வாயு பத்மாசனம் ஆகியவற்றை ஆகாயத்தில் மிதந்தவாறு செய்தனர். #InternationalYogaDay2018
    கோவை மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா தின பயிற்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    கோவை:

    4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.

    கோவை மாவட்டத்திலும் இன்று பல்வேறு இடங்களில் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டது. கோவை வெள்ளிங்கிரி ஈஷா யோகா மையத்தில் 112 அடி ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற சிறப்பு யோகா நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 150 பேர், அதிவிரைவுப்படை வீரர்கள் 400 பேர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தின் பயிற்சியாளர்கள் மூலம் சக்தி வாய்ந்த ‘உப-யோகா’ கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைச் சாலைகளிலும் ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

    கோவை அரசு கலை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    வ.உ.சி. மைதானத்தில் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் கோவை பகுதி சார்பாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவை மாநகர காவல் துறை மற்றும் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை சார்பில் அவினாசி ரோட் டில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.

    இதில் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். துணை கமி‌ஷனர்கள் தர்மராஜன் பெருமாள், ஓய்வு பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்தில் மருத்துவ மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இதே போல மாவட்டத்தின் பல இடங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு அமைப்புகள் சார்பிலும் யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டன.

    இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த யோகா பயிற்சிகள் தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்ததாகவும், மன அழுத்தத்தை குறைக்க உதவியாகவும் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

    புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் யோகா தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். #InternationalYogaDay2018
    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் இன்று 4-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் யோகா தினம் நடந்தது. கடற்கரை சாலையில் இன்று காலை 7 மணிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், 500 கல்லூரி மாணவர்கள், 500 யோகா ஆர்வலர்கள் பங்கேற்ற யோகா செயல்விளக்கம் நடந்தது.

    ஈஷா யோகா மையத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் மேடையிலிருந்து யோகா செயல்விளக்கம் அளிக்க அதனை மாணவர்கள் பின்பற்றி செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சாத்விநிரஞ்சன் ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் பாலன் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையாளர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலர் கந்தவேலு, சுற்றுலாத்துறை செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    யோகா தினத்தையொட்டி ஆயுஷ் மருத்துவ கண்காட்சி கடற்கரை சாலை கைவினை அங்காடியில் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.

    யோகா தினத்தை முன்னிட்டு புதுவை கவர்னர் மாளிகையில் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது.

    காலாப்பட்டு சிறையில் கைதிகளுக்கு யோகா செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதை பின்பற்றி கைதிகள் யோகா செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டார்.

    இதேபோல ஜிப்மர் கலையரங்கில் யோகா தேசிய கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை நடந்தது. இந்த பயிற்சியை மத்திய மந்திரி சாத்விநிரஞ்சன் ஜோதி தொடங்கி வைத்தார். கவர்னர் கிரண்பேடி, ஜிப்மர் இயக்குனர் டாக்டர் விவேகானந்தன், திட்ட இயக்குனர் பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #InternationalYogaDay2018
    ×