செய்திகள்
மத்திய அரசு அசந்து தூங்கியது நிரூபணம்: ராகுல்காந்தி
கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்தியது, முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதல். ஆனால், இந்திய அரசு அசந்து தூங்கிக் கொண்டிருந்தது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்‘ பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இப்போது எல்லாம் தெளிவாகி விட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்தியது, முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதல். ஆனால், இந்திய அரசு அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. எந்த பிரச்சினையும் இல்லை என்று மறுத்து வந்தது. ஆனால், அதற்கான விலையை பலியான வீரர்கள் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், சீன ராணுவம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் கூறியது பற்றிய பத்திரிகை செய்தியை ராகுல்காந்தி இணைத்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்‘ பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இப்போது எல்லாம் தெளிவாகி விட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்தியது, முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதல். ஆனால், இந்திய அரசு அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. எந்த பிரச்சினையும் இல்லை என்று மறுத்து வந்தது. ஆனால், அதற்கான விலையை பலியான வீரர்கள் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், சீன ராணுவம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் கூறியது பற்றிய பத்திரிகை செய்தியை ராகுல்காந்தி இணைத்துள்ளார்.