செய்திகள்
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
உத்தரபிரதேச மாநில போலீஸ் தலைமையகத்தின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்ததுடன், அவரை வெடிகுண்டு வீசி கொல்லப்போவதாக மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது.
லக்னோ :
உத்தரபிரதேச மாநில போலீஸ் தலைமையகத்தின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்ததுடன், அவரை வெடிகுண்டு வீசி கொல்லப்போவதாக மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அங்குள்ள கோமதி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும், விரைவில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநில போலீஸ் தலைமையகத்தின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்ததுடன், அவரை வெடிகுண்டு வீசி கொல்லப்போவதாக மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அங்குள்ள கோமதி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும், விரைவில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.