என் மலர்
நீங்கள் தேடியது "Yogi Adityanath"
- நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
- உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
அந்த கோர விபத்தின் தாக்கம் மறைவதற்குள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் உள்ள சனார் ஜங்ஷன் பகுதியில் இன்று காலை 9 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று 4-வது நடைமேடை பகுதியில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் 3-வது நடைமேடையை கடந்து சென்று கொண்டி ருந்தனர்.
பயணிகளில் மற்றொரு பிரிவினர் தண்டவாளத்தை கடந்து அடுத்த பக்கம் செல்வதற்கு நடந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர் திசையில் இருந்து மிக வேகமாக ஹவுரா செல்லும் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
ரெயில் மிக அருகில் வந்த போதுதான் பயணிகள் கவனித்து அலறினார்கள். 4-வது நடைமேடைக்கும், 3-வது நடைமேடைக்கும் இடையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அதற்குள் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர். அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சனார் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லக்கூடிய ரெயில் ஆகும். இதனால் அந்த ரெயில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
ரெயில் மோதிய வேகத்தில் 3 பயணிகளின் உடல்கள் கடுமையாக சிதறி போனது. பலியான 6 பயணிகளும் இன்று பவுணர்மி தினத்தை முன்னிட்டு வாரணாசியில் புனித நீராடி சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
6 பேர் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் அதிர்ச்சி தெரிவித்தார். பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள அவர் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.
சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என்றார் உள்துறை மந்திரி அமித்ஷா.
- யோகியை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்பவேண்டும் என விரும்புவதாக அகிலேஷ் கூறினார்.
லக்னோ:
சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பொய்யான புள்ளிவிவரங்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் பாஜகவினர்.
அண்டை நாட்டவர் குறித்து பாஜகவினர் கூறுவது அவர்களின் புனைவுக் கதைகள் தான்.
உத்தர பிரதேசத்திலும் ஊடுருவல்காரர்கள் உள்ளனர். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் ஊடுருவல்காரர் தான்.
உண்மையில் அவர் உத்தரகாண்ட்டில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு ஊடுருவியவர். அவரை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்ப வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என தெரிவித்தார்.
அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் இவ்வாறு கூறியுள்ளார்.
- ஒரு துறவி சமூகத்தை தனது குடும்பமாகவும், தேசத்தை தனது குலமாகவும் கருதுவார், அவரது ஒரே அடையாளம் சனாதன தர்மம் தான்.
- ராமர் கோவில், இரு மகான்களின் உறுதியான போராட்டத்திற்கு சான்றாக நிற்கிறது.
அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
நேற்று, கோரக்நாத் கோவிலில் மகான் திக்விஜய்நாத்தின் 56-வது நினைவு நாளையும், மகான் அவைத்தியநாத்தின் 11-வது நினைவு நாளையும் முன்னிட்டு நடைபெற்ற விழாவில் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "இன்று, இந்தியாவில் ராமர் கோவிலை கண்டு பெருமைப்படாதவர்கள் யார்? அப்படிப் பெருமை கொள்ளாதவர்கள் இந்தியர்களாக இருப்பது சந்தேகத்திற்குரியது" என்று தெரிவித்தார்.
மேலும், "ஒரு துறவி சமூகத்தை தனது குடும்பமாகவும், தேசத்தை தனது குலமாகவும் கருதுவார், அவரது ஒரே அடையாளம் சனாதன தர்மம் தான். ராமர் கோவில், இரு மகான்களின் உறுதியான போராட்டத்திற்கு சான்றாக நிற்கிறது" என்று தெரிவித்தார்.
- நீதியை பெற்று தந்ததற்காக முதல் மந்திரிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் பூஜா பால்.
- கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி பூஜா பால் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
லக்னோ:
உ.பி.யின் பிரயாக்ராஜில் 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வான ராஜு பால் சுட்டுக் கொல்லப்பட்டார். பூஜா பாலை திருமணம் செய்த சில நாட்களில் இந்தச் சம்பவம் நடந்தது. இதற்கு முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் 2023-ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச சட்டசபை கூட்டத்தொடரின்போது சமாஜ்வாதி கட்சி பெண் எம்.எல்.ஏ.வான பூஜா பால், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்தும், அவரை புகழ்ந்தும் பேசினார்.
இதற்கிடையே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என கூறி பூஜா பாலை சமாஜ்வாதி கட்சியில் இருந்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நீக்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், லக்னோ நகரில் உள்ள முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இல்லத்துக்கு சென்ற பூஜா பால், அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தனது கணவர் கொலை வழக்கில் நீதி பெற்றுத் தந்ததற்தாக முதல் மந்திரிக்கு நன்றி என்றார் பூஜா பால்.
- கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு பூஜா பால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
லக்னோ:
கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, உத்தரபிரதேசத்தில் பூஜா பால் எம்எல்ஏ, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக, சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டசபையில் சமாஜ்வாதி எம்.எல்.ஏ.வான பூஜா பால் பேசுகையில், தனது கணவர் கொலை வழக்கில் நீதியை பெற்றுத் தந்ததாக முதல் மந்திரி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், முதல் மந்திரியைப் பாராட்டி பேசிய சில மணி நேரங்களுக்கு பிறகு, பூஜா பாலை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். கட்சி விரோத நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு அவரை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பூஜா பால், சமாஜ்வாதி கட்சியினரின் பெண்களுக்கு எதிரான நிலையை இது காட்டுகிறது என கடுமையாகச் சாடினார்.
- உ.பி.யில் நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்தார்.
- இதற்குமுன் இந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கோவிந்த் வல்லப் பந்த்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று அக்கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
இதையடுத்து, கடந்த 2022-ல் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.க. இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக முதல் மந்திரியானார்.
இந்நிலையில், உ.பி. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று நேற்றுடன் 8 ஆண்டு மற்றும் 130 நாளை நிறைவு செய்தார்.
இதன்மூலம் அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல் மந்திரியாக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்குமுன் இந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கோவிந்த் வல்லப் பந்த். உத்தர பிரதேசத்தின் (சுதந்திரத்துக்கு பிறகு) முதல் முதல் மந்திரியான அவர் 8 ஆண்டு 127 நாள் தொடர்ந்து முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
- முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
லக்னோ:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
முர்ஷிதாபாத் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி அமைதியாக இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் மிரட்டல்களுக்கு மேல் மிரட்டல்களை விடுக்கின்றனர்.
வங்கதேசத்தில் நடந்ததை அவர்கள் வெட்கமின்றி ஆதரிக்கிறார்கள். வங்கதேசத்தை அவர்கள் விரும்பினால் அவர்கள் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் ஏன் இந்திய நிலத்திற்கு சுமையாக இருக்கிறார்கள்?
வங்கதேசம் பற்றி எரிகிறது. மாநில முதல் மந்திரி அமைதியாக இருக்கிறார். மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரக்காரர்களுக்கு, கலவரத்தை உருவாக்க அனைத்து சுதந்திரத்தையும் அளித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக முழு முர்ஷிதாபாத் தீப்பிடித்து எரிகிறது. ஆனால் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. இத்தகைய அராஜகத்தை அடக்க வேண்டும் என தெரிவித்தார்.
- உத்தரப் பிரதேசத்தில் இது நாள்தோறும் நடப்பது விந்தையாக இருக்கிறது.
- ஒவ்வொரு நாளும், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மொத்தமாக சீர்குலைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடனாக பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை என்ற சிவில் பிரச்னையை கிரிமினல் வழக்காக மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சிவில் வழக்குகளை குற்றவியல் விஷயங்களாக மாற்றுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இது மிகவும் தவறு. ஆனால் இது நடக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் இது நாள்தோறும் நடப்பது விந்தையாக இருக்கிறது. இந்த நடைமுறை தவறு என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியும் மீண்டும் இதையே செய்வதா?.
ஒவ்வொரு நாளும், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன. இது அபத்தமானது. கடன் வாங்கிய பணத்தை கொடுக்காமல் இருப்பதை மட்டும் வைத்து குற்றவியல் குற்றமாக அதை மாற்ற முடியாது என்று தெரிவித்தார்.
- ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாவதற்கு முன்பே ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- வக்பு வாரியத்தை நில மாஃபியா என யோகி ஆதித்யநாத் வர்ணித்தார்.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது.
இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்குத் தொடர உள்ளதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் வக்பு மசோதா அடுத்தாக ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாவதற்கு முன்பே உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு சட்டவிரோத வக்பு சொத்துக்களை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அம்மாநில எதிர்க்க்காட்சியான சமாஜ்வாதி கட்சி எம்.பி. கோபால் யாதவ், இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டும். இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
அதற்குள் சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த உத்தரப் பிரதேச முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுவிட்டார்.
இந்த மசோதாவை எதிர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கிறது, நிற்கும் என தெரிவித்துள்ளார். முன்னதாக வக்பு வாரியத்தை நில மாஃபியா என யோகி ஆதித்யநாத் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.
- கட்சி இந்தப் பதவியைக் கொடுத்ததால் இங்குப் பணி செய்து வருகிறேன்.
- அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல என தெரிவித்தார்.
லக்னோ:
சமீபத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது, விரைவில் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளார் என தகவல் வெளியானது.
இதற்கிடையே, பிரதமர் மோடிக்குப் பிறகு அமித்ஷா அல்லது உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இருவரில் ஒருவர் பிரதமர் பதவியை ஏற்க உள்ளனர் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் இப்போது மாநில முதல் மந்திரியாக இருக்கிறேன். இதுவும்கூட கட்சி தான் என்னை உத்தரப் பிரதேச மக்களுக்காக இந்த பொறுப்பை வழங்கியுள்ளது.
அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல. நான் ஒருபோதும் என்னை முழு நேர அரசியல்வாதியாகக் கருதியது இல்லை. கட்சி இந்தப் பதவியைக் கொடுத்ததால் இங்குப் பணி செய்து வருகிறேன். ஆனால் உண்மையில் நான் ஒரு யோகி. இங்கு இருக்கும் வரை இந்த வேலையை செய்வேன். ஆனால் இந்த வேலையும் ஒரு கட்டத்தில் முடிந்துவிடும்.

நான் முதல் மந்திரியாக இருக்கவே கட்சி தான் காரணம். தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் நான் இங்கே தொடர்ந்து முதல் மந்திரியாக இருக்கமுடியுமா?
தேர்தலில் யாரைக் களமிறக்கலாம் என்பதைக் கட்சியின் பாராளுமன்ற குழு தான் முடிவு செய்யும். எல்லா விவாதமும் அங்கு தான் நடக்கும்.
பல்வேறு விஷயங்களை ஆலோசனை செய்தே வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். எனவே சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லக் கூடாது. ஆனால், வேண்டும் என்றே இதுபோல பேசுபவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார்.
- பொறுப்பே இல்லாமல் நடக்கும் ஆட்சியின் கீழ் இப்படி இடிக்கப்பட்டுள்ளன.
- புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ10 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும்
புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புல்டோசர்கள் கொண்டு மக்கள் வசிக்கும் வீடுகளை இடிப்பது குறித்து உச்சநீதிமன்றம் முந்தைய காலங்களிலும் கடும் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் உ.பி. அரசின் இந்த செயல்பாடுகள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பிரயாக்ராஜ் நகரில் வீடுகள் மேம்பாட்டு வாரியத்தால் இடுத்துத் தள்ளப்பட்டது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உச்சல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், பிரயாக்ராஜ் மேம்பாட்டுக் வாரியம் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளுவது மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது. பொறுப்பே இல்லாமல் நடக்கும் ஆட்சியின் கீழ் இப்படி இடிக்கப்பட்டுள்ளன.
உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் பொதுமக்களின் வீடுகளை இப்படி இடித்து தள்ளுவது ஏற்க முடியாதது. இத்தகைய செயல்பாடுகள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ10 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
- தங்கள் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் என்ற விவரங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிடுமா?
- எத்தனை மாணவர்கள் தமிழை ஒரு மொழி விருப்பமாகப் படித்துள்ளனர்?.
தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையை இந்து திணிப்பு என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி வரையிலான கல்வி நிதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது.
இந்நிலையில் மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்வதாக மு.க. ஸ்டாலினை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்து வருகிறார்.
செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் பேசிய யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், ஆனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தடுக்கிறார்கள்.
உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம், அதனால் உ.பி. சிறியதாகிவிட்டதா?. மாறாக உத்தர பிரதேசத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தங்கள் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் என்ற விவரங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிடுமா?.
எத்தனை மாணவர்கள் தமிழை விருப்பம மொழிப் பாடமாக படித்துள்ளனர்?. தமிழ்நாட்டில் மாணவர்கள் கட்டாயமாக இந்தி கற்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தமிழ் குறித்த முன் அறிவு இல்லாமல் வருகிறார்கள். இந்தி திணிப்பை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் முந்தைய விமர்சனத்துக்கு பதிலளித்திருந்த முதல்வர் ஸ்டாலின், "எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை, இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






