செய்திகள்
பாகிஸ்தான், வங்காளதேசத்துடனான எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - அமித்ஷா உத்தரவு
பாகிஸ்தான், வங்காளதேசத்துடனான எல்லையில், குறிப்பாக வேலி இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டார்.
புதுடெல்லி:
எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்தினார். பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், இரு நாடுகளுடனான எல்லையில், குறிப்பாக வேலி இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டார். எல்லை தாண்டும் சம்பவங்கள் நடக்காமல் தடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்தினார். பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், இரு நாடுகளுடனான எல்லையில், குறிப்பாக வேலி இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டார். எல்லை தாண்டும் சம்பவங்கள் நடக்காமல் தடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.