செய்திகள்
வீட்டிலேயே தயாரித்த முகக் கவசங்களை அணியலாம்- மத்திய அரசு அறிவுரை
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகக் கவசம் அணியலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பெரிய அளவில் சமூகத்தில் பரவாமல் தடுக்க முக கவசம் உதவும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முக கவசங்களை மக்கள் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.