செய்திகள்
காங்கிரசின் முன்னணி தலைவராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து

டெல்லியில் சோனியாவுடன் சித்து சந்திப்பு - பிரியங்காவையும் சந்தித்தார்

Published On 2020-02-27 23:45 GMT   |   Update On 2020-02-27 23:45 GMT
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், பொதுச்செயலாளர் பிரியங்காவையும் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

பஞ்சாப் மாநில காங்கிரசின் முன்னணி தலைவராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, சமீப காலமாக மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மாநில மந்திரியாக இருந்த அவர் பாராளுமன்ற தேர்தலுக்குப்பிறகு தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில் அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், பொதுச்செயலாளர் பிரியங்காவையும் சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி சந்திப்புகள் கடந்த 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடந்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

இந்த சந்திப்பின்போது, பஞ்சாப் அரசியல் சூழல் குறித்தும், காங்கிரசை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வருவதற்கு சில செயல் திட்டங்களையும் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டு உள்ள சித்து, அவற்றை சோனியாவும், பிரியங்காவும் அமைதியாக கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
Tags:    

Similar News