செய்திகள்
கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புங்கள்- அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்
டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
டெல்லி போலீசாரால் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் ராணுவத்தை வரவழைக்க வேண்டும். வன்முறை ஏற்படும் சூழல் உள்ள மற்ற பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
டெல்லி போலீசாரால் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் ராணுவத்தை வரவழைக்க வேண்டும். வன்முறை ஏற்படும் சூழல் உள்ள மற்ற பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.