செய்திகள்
முதல் மந்திரி நிதிஷ்குமார்

பீகாரில் என்ஆர்சி அமல்படுத்தப்பட மாட்டாது - சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2020-02-25 11:45 GMT   |   Update On 2020-02-25 11:45 GMT
பீகார் மாநிலத்தில் என்ஆர்சி திட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பாட்னா:

பீகார் மாநில சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, என்ஆர்சி திட்டத்தை அமல்படுத்த மாட்டோம். என்பிஆர் திட்டத்தை 2010-ம் ஆண்டு சரத்து படியே அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) படிவங்களிலிருந்து 'சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை' தவிர்க்க வேண்டும் எனக்கோரி மத்திய அரசுக்கு பீகார் மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News