செய்திகள்
மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

தேர்வு பயத்தை போக்க மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

Published On 2020-01-20 06:36 GMT   |   Update On 2020-01-20 06:36 GMT
தலைநகர் டெல்லியில் தேர்வுகள் குறித்த மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.
புதுடெல்லி:

தேர்வுகள் குறித்த மன அழுத்தத்தைப் போக்கி அவர்களுக்கு பயனுள்ள குறிப்புகளை வழங்கும் நோக்கில் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் உள்ள தல்கத்தோரா உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என மொத்தம் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
Tags:    

Similar News