search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுடன் கலந்துரையாடல்"

    • 5 மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையினை கலெக்டர் வழங்கினார்
    • மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கலெக்டர் முருகேஷ், இன்று புதிதாக 5 மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையினை வழங்கி பேசினார்.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பழங்குடி இன மாணவ, மாணவி களுக்கு தொழிற்பிரிவு வகுப்புக ளான பொருத்துநர், கம்மியர் மோட்டார் வண்டி, கம்பியாள், பற்றினைப்பவர், குழாய் பொருத்துபவர். தொழிற்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளர், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் தன்னியக்கு மயம், மேம்படுத்தப்பட்ட எந்திர தொழில்நுட்ப பணியாளர் போன்ற தொழிற்பிரிவு பாடங்களை பழங்குடி இன மாணவ, மாணவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு அரசால் பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை.

    அனைத்து பயிற்சியா ளர்களுக்கும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750-ம் மற்றும் விலையில்லா மடிக்கணினி, பாட புத்தகம், வரைபடக் கருவிகள், சீருடைகள், மூடுகாலணி, இலவசபேருந்து கட்டண சலுகை மாணவர்கள் தங்கி பயில விடுதி வசதிகள் அரசு பள்ளி மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

    தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது. மாணவ, மாணவியர்கள் தங்கள் மதிப்பெண் அடிப்ப டையில் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கல்வி படித்து வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும்.

    மேலும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிய மாணவர்கள் சேர்க்கை இன்று வரை 60 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    மேலும் இம்மாதம் 31.07.2023 வரை புதிய மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என கலெக்டர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் (ஆரணி) . தனலட்சுமி, மாவட்ட திட்ட அலுவலர் பழங்குடியினர் நலன் அலுவலர்.

    ப.செந்தி ல்குமார், அரசினர் தொழிற் பயிற்சி முதல்வர்.ஆர்.ஜெய்சங்கர், ஜவ்வாது மலை ஒன்றிய குழுத்த லைவர் ஜீ வா மூர்த்தி. உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்ட னர்.

    ×