செய்திகள்
தேசிய மனித உரிமை ஆணைய அலுவலகம்

உ.பி.யில் போலீஸ் அத்துமீறல்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Published On 2019-12-25 09:33 GMT   |   Update On 2019-12-25 09:56 GMT
உத்தர பிரதேசம் மாநிலத்தில் போராட்டங்களின்போது நடந்த அத்துமீறல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் வெடித்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. 



இந்நிலையில், போராட்டங்களின்போது நடந்த மனித உரிமை அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம்  இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tags:    

Similar News