செய்திகள்
பி.எஸ்.என்.எல்.

92 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் - மத்திய அரசு தகவல்

Published On 2019-12-04 23:34 GMT   |   Update On 2019-12-04 23:34 GMT
விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம் பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்தார்.
புதுடெல்லி:

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த 3-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம் பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இரு நிறுவனங்களையும் மத்திய அரசு இணைக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்க முடியும். இந்த நிறுவனங்களுக்கு 4ஜி சேவை அளிக்கப்படும். இரண்டையும் லாபகரமாக இயக்க உறுதி பூண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News