செய்திகள்
ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு - அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல்

Published On 2019-10-23 06:21 GMT   |   Update On 2019-10-23 06:28 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில், ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அமலாக்கத்துறை வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. 



ஆனால், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதால், அவர் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது.  எனவே, அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அமலாக்கத்துறை காவலில் உள்ள ப.சிதம்பரத்திடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக் காவல் நாளை முடிவடைகிறது. 
Tags:    

Similar News