செய்திகள்
ப.சிதம்பரத்துக்கு வயிற்றுவலி - மருத்துவ பரிசோதனைக்கு பின் மீண்டும் சிறை திரும்பினார்
வயிற்று வலியால அவதிப்பட்ட முன்னாள் மந்திரி பசிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் முடிந்து அவர் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு இன்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் மந்திரி பசிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகள் முடிந்து அவர் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.