செய்திகள்
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திரதின வாழ்த்து
73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நேற்று இரவு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.
இந்நிலையில், 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.