செய்திகள்
ராகுல் காந்தி

வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும்- மோடிக்கு ராகுல் வேண்டுகோள்

Published On 2019-08-09 07:05 GMT   |   Update On 2019-08-09 07:05 GMT
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உடனடியாக உதவவேண்டும் என்று அந்த தொகுதியின் எம்.பி.யான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளா:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்து வருவதால் அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வயநாடு மாவட்டம் மழை வெள்ளதால் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உடனடியாக உதவவேண்டும் என்று அந்த தொகுதியின் எம்.பி.யான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல்காந்தி, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வயநாடு மக்களுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.
Tags:    

Similar News