search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா தென்மேற்கு பருவமழை"

    தென்மேற்கு பருவமழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

    திருப்பூர்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் கடந்த 2 நாட்களாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று இரவு திருப்பூர் மங்கலம் ரோடு- காலேஜ் ரோடு இடையே உள்ள அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் பாலத்தை கடக்காமல் இருக்க இருபுறங்களிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மங்கலம் ரோடு- காலேஜ் ரோடு ஒரு கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. தற்போது தரைப்பாலம் அடைக்கப்பட்டதால் 10 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லவேண்டும். ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×