செய்திகள்
விவசாயிகள் பிரச்சனை- ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் பதிலடி
பாராளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேசிய ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று ராகுல்காந்தி பேசுகையில், “நாட்டில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் இதில் தலையிட்டு விவசாயிகள் பிரச்சனையை தீர்த்து சீர்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
ராகுலின் இந்த பேச்சுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் உடனடியாக பதிலடி கொடுத்தார். ராஜ்நாத்சிங் கூறுகையில், “விவசாயிகளுக்கு எதிராக இன்று மிக கொடூரமான நிலை இருப்பதாக ராகுல் சொல்கிறார். இந்த மோசமான நிலை ஏற்பட மத்தியில் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த மோசமான காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளே காரணம்” என்றார்.
பாராளுமன்றத்தில் இன்று ராகுல்காந்தி பேசுகையில், “நாட்டில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் இதில் தலையிட்டு விவசாயிகள் பிரச்சனையை தீர்த்து சீர்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
ராகுலின் இந்த பேச்சுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் உடனடியாக பதிலடி கொடுத்தார். ராஜ்நாத்சிங் கூறுகையில், “விவசாயிகளுக்கு எதிராக இன்று மிக கொடூரமான நிலை இருப்பதாக ராகுல் சொல்கிறார். இந்த மோசமான நிலை ஏற்பட மத்தியில் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த மோசமான காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளே காரணம்” என்றார்.