செய்திகள்
பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள்- பாராளுமன்றத்தில் சபாநாயகர் மரியாதை
பாஜக நிறுவனரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாராளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு சபாநாயகர் மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி:
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி, சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய அரசில், வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக பணியாற்றினார். பின்னர் ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை நிறுவினார். பின் இக்கட்சியின் பெயர் பாரதிய ஜனதா கட்சி என மாறியது குறிப்பிடத்தக்கது.
பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜியின் திருவுருவப்படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்த திருவுருவப்படத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா மரியாதை செலுத்தி வணங்கினார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி, சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய அரசில், வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக பணியாற்றினார். பின்னர் ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை நிறுவினார். பின் இக்கட்சியின் பெயர் பாரதிய ஜனதா கட்சி என மாறியது குறிப்பிடத்தக்கது.