செய்திகள்

நிதி ஆயோக் தலைவரின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு

Published On 2019-06-26 11:07 GMT   |   Update On 2019-06-26 11:07 GMT
நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் மத்திய திட்ட கமிஷன் என்ற அமைப்பு கலைக்கப்பட்டு இந்தியாவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிதி ஆயோக் என்ற அமைப்பு பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.



இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் கண்ட் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags:    

Similar News