செய்திகள்

காஷ்மீர்- பாதுகாப்பு பணியின்போது துப்பாக்கி வெடித்து போலீஸ்காரர் பலி

Published On 2019-06-24 09:21 GMT   |   Update On 2019-06-24 09:21 GMT
காஷ்மீரில் பாதுகாப்பு பணியின்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜம்மு:-

அர்ஜுன் தேவ் என்பவர் ஜம்மு காஷ்மீரின் சுஞ்வான் பகுதியில்  காவலர் பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்தார். இவர் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தார். அவர் எதிர்பாராத விதமாக கையிலிருந்த துப்பாக்கி வெடித்ததில் குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அர்ஜுன் தேவ் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News