செய்திகள்
ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள்
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் இடம் பெற உள்ளனர். அவர்கள் நாளை பதவி ஏற்கிறார்கள்.
அமராவதி:
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி 151 இடங்களில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக பதவியேற்றார்.
இந்நிலையில், ஆந்திர அமைச்சரவையில் 5 பேர் துணை முதல் மந்திரிகளாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமுதாயத்திற்கு ஒருவர் என 5 பேரை துணை முதல் மந்திரிகளாக ஆந்திரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நியமிக்க உள்ளார். இவர்கள் 5 பேரும் நாளை பதவி ஏற்கிறார்கள். துணை முதல் மந்திரி, மந்திரிகள் என 24 பேர் நாளை காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.