செய்திகள்

ஒடிசா - கோராபுட் மாவட்டத்தில் 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

Published On 2019-05-08 12:44 GMT   |   Update On 2019-05-08 12:44 GMT
ஒடிசா மாநிலம் கோராபுட் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பெண்கள் உள்பட 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Maoistskilled
புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பதுவா பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த மாவோயிஸ்ட்கள் அதிரடி படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடி படையினரும் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பெண்கள் உள்பட 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஏற்கனவே, சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Maoistskilled
Tags:    

Similar News