செய்திகள்
நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
மகராஷ்டிராவின் கட்ச்ரோலியில் கமாண்டோ படை மீதான நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளர். #Naxalattack #pmmodi
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் போலீஸ் வாகனம் மீது வெடி குண்டுகளை வீசி நக்சலைட்டுகள் இன்று நடத்திய தாக்குதலில் 16 போலீசார் உயிரிழந்தனர். இத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘நக்சல் தாக்குதலில் மரணமடைந்த துணிச்சலான கமாண்டோ படை விரர்களுக்கு வீரவணக்கம். நம் வீரர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது’ என கூறியுள்ளார். #Naxalattack #pmmodi