செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் - சிறுமி, எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி பலி

Published On 2019-04-01 11:42 GMT   |   Update On 2019-04-01 12:08 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 5 வயது சிறுமியும் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரியும் உயிரிழந்தனர். #BSFofficer #Pakshelling #PoonchLoC
ஜம்மு:  

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட், கிருஷ்ணா காட்டி எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார்  குண்டுகளை வீசியும் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.

இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையில் அங்கு கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்துவரும் நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரும் ஷாபூர் என்ற எல்லையோர கிராமத்தை சேர்ந்த சோபியா(5) என்ற சிறுமியும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தாக்குதலில் 6 வீரர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #BSFofficer #Pakshelling #PoonchLoC 
Tags:    

Similar News