செய்திகள்

காஷ்மீரில் இன்று மாலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2019-03-29 14:31 GMT   |   Update On 2019-03-29 14:31 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நவ்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #terroristskilled #Soporeencounter #Pakistaniterrorists
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நவ்காம் மாவட்டத்துக்குட்பட்ட சுட்சு கலான் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இன்று மாலை இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் இந்திய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் மோதல் நீடித்து வருவதாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த அலி மற்றும் இத்ரீஸ் என தெரியவந்துள்ளது. #terroristskilled #Soporeencounter #Pakistaniterrorists 
Tags:    

Similar News