செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.500 கோடி போதை பொருள் சிக்கியது - 9 பேர் கைது

Published On 2019-03-27 08:33 GMT   |   Update On 2019-03-27 08:33 GMT
பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட 500 கோடி போதை பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். #Drugtrafficking

காந்திநகர்:

குஜராத் கடற்கரைபகுதியில் இன்று ஒரு படகில் இருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினர் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.500 கோடியாகும்.

இந்த போதை பொருள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரை பார்த்ததும் போதை பொருள் கடத்தும் கும்பல் படகை தீவைத்து எரித்தது. #Drugtrafficking

Tags:    

Similar News