செய்திகள்

ரெயில்வே துறையில் கூடுதலாக 2.5 லட்சம் பணியிடங்கள் - பியுஷ் கோயல் அறிவிப்பு

Published On 2019-01-23 12:34 GMT   |   Update On 2019-01-23 12:58 GMT
ரெயில்வே துறையில் கூடுதலாக 2.5 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். #RailwaysMinister #PiyushGoyal #250Lakhlvacancies #additionalvacancies #250LakhRailwayvacancies
புதுடெல்லி:

இந்தியாவில் அதிகமான சொத்துகளுடன், ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய துறையாக ரெயில்வே துறை இருந்து வருகிறது. இத்துறையில் சுமார் 14 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆண்டொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் புதிதாக பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்நிலையில், ரெயில்வே துறையில் கூடுதலாக 2.5 லட்சம்  புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இனி ரெயில்வே துறை இருக்கும் எனவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். #RailwaysMinister #PiyushGoyal #250Lakhlvacancies #additionalvacancies #250LakhRailwayvacancies 
Tags:    

Similar News