செய்திகள்
ஜார்கண்ட் முன்னாள் மந்திரி காங்கிரசில் இணைந்தார்
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் மந்திரியுமான ஜலேஷ்வர் மஹாட்டோ இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். #JaleshwarMahato #JanataDalU #formerJharkhandMinister
புதுடெல்லி:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஜார்கண்ட் மாநில தலைவராக இருந்தவர் ஜலேஷ்வர் மஹாட்டோ. கடந்த 2000-2009 ஆண்டுவாக்கில் ஜார்கண்ட் சட்டசபையில் பாக்மாரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், அம்மாநில மந்திரிசபையிலும் பணியாற்றினார்.
தனது பதவிக்காலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டுக்கு பாடுபட்டவர் என்ற சிறப்பை பெற்ற ஜலேஷ்வர் மஹாட்டோ பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமான நண்பராக அறியப்பட்டவராவார்.
இந்நிலையில், இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த ஜலேஷ்வர் மஹாட்டோ, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார். #JaleshwarMahato #JanataDalU #formerJharkhandMinister