செய்திகள்

திருப்பதியில் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சி- தேவஸ்தான அதிகாரி தகவல்

Published On 2018-12-26 04:29 GMT   |   Update On 2018-12-26 04:29 GMT
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடுத்த மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. #Tirupati #TirupatiTemple
திருப்பதி:

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடுத்த மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தேவஸ்தானத்தின் செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் உள்ள ஸ்வேதா பவனில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் இந்தி தர்மம், கோவில், அர்ச்சகர் பணி உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சியை 15 நாட்கள், 10 நாட்கள், 5 நாட்கள் என்று பிரித்து தேவஸ்தானம் அளித்து வருகிறது. அதன்படி அர்ச்சகர் பயிற்சியை முடித்த 32 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அதிகாரிகள் கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற 32 பேருக்கும் சான்றிதழ்களையும், அர்ச்சகர்களுக்கான பூஜை பொருட்களையும் வழங்கினர்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சியை அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இப்பயிற்சியைப் பெறுவதற்கு வரும் இளைஞர்களுக்கு உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தானம் இலவசமாக அளித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Tirupati #TirupatiTemple
Tags:    

Similar News