செய்திகள்

முதல்வராக வேண்டும் என்ற பேராசை கிடையாது- சித்தராமையா

Published On 2018-10-26 14:03 GMT   |   Update On 2018-10-26 14:03 GMT
கர்நாடக மாநில முதல்வராக வேண்டும் என்ற பேராசை இல்லை, ஆனால் அடுத்த தேர்தலில் பார்க்கலாம் என சித்தராமையா தெரிவித்துள்ளார். #Siddaramaiah #congress
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. ஆனால் மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 2-வது இடமே பிடித்தது. பா.ஜனதாவிற்கு அதிக தொகுதிகள் கிடைத்த போதிலும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. நீண்ட இழுபறிக்குப்பின் குமாரசாமி ஆட்சியமைத்தார்.

இந்நிலையில் தனக்கு மீண்டும் முதல்வராகும் பேராசை இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா கூறுகையில் ‘‘நான் முதல்வராக போகிறேன் என்ற எடியூரப்பா கூறுவது போல் நான் எங்கேயாவது அப்படி கூறினேனா?. அது போன்ற கேள்விகள் எழும்ப வேண்டியதில்லை. அடுத்த தேர்தலில் மக்கள் ஆதரவு அளித்தால், அப்போது பார்க்கலாம்.

முதலமைச்சராக பதவி வகிக்கும் வாய்ப்பு எனக்கு ஐந்து வருடங்கள் கிடைத்தது. நாங்கள் திறமையான அரசை நடத்தி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதில் எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. முதல்வராக வேண்டும் என்ற பேராசை எனக்கில்லை’’ என்றார். #Siddaramaiah #congress 
Tags:    

Similar News